Wednesday, February 23, 2011

அன்பு

 அன்பின் சுட்டியை தங்கையின் குறும்பில் உணர்ந்தேன்,
அன்பின் சுகத்தை அன்னைமடி உறக்கத்தில் உணர்ந்தேன், 
அன்பின் கண்டிப்பை தந்தையின் குரலில் உணர்ந்தேன், 
அன்பின் மகிழ்ச்சியை நண்பனின் நட்பில் உணர்ந்தேன்,
அன்பின் வலியை அவள் என்னைவிட்டு சென்றபோது உணர்ந்தேன், 
அன்பின் எல்லையை என் தேவனில் உணர்ந்தேன், 
இவை அனைத்தையும் உணர்ந்தபின்,இவ்வுலகில் அன்பைவிட சிறந்தது 
ஒன்றுமில்லை என உணர்ந்தேன்.